(எம்.மனோசித்ரா)
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக செய்துகொள்ளப்பட்ட புதிய கூட்டு ஒப்பந்தத்தை வர்த்தமானிப்படுத்தலை தற்காலிகமான இடைநிறுத்துவதற்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனான தமிழ் முற்போக்கு கூட்டணியின் சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் 5 ஆம் திகதி அமைச்சர்களான நவீன் திஸாநாயக்க மற்றும் ரவீந்திர சமவீர ஆகியோர்களது பங்குபற்றலுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தையொன்றை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை அலரி மாளிகையில் புதிய கூட்டு ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டிருந்தது. அதில் அடிப்படை சம்பளம் 700 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதிய கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தொழிலாளர்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணி அதில் பிரதமர் கலந்து கொண்டிருந்தமைக்கு விசனம் வெளியிட்டிருந்தது.
இதன் காரணமாக தாம் தொடர்ந்தும் அரசாங்கத்தில் நீடிப்பதா இல்லையா என்ற தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், பிரதமருடனான பேச்சுவார்த்தையின் அது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று மாலை 4 மணியளவில் அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க, தொழில் அமைச்சர் ரவீந்திர சமரவீர, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேஷன், பிரதி தலைவர்களான பழனி திகாம்பரம், வேலுசாமி இராதா கிருஷ்ணன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான திலகர், அரவிந்த குமார் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM