(இராஜதுரை ஹஷான்)
அரசியல் நெருக்கடியின் போது வடிவேல் சுரேஷ் கட்சி தாவல்களில் ஈடுபட்டு இராஜாங்க அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்டார்.
இதற்கு அவர் குறிப்பிட்ட ஒரே நியாயப்படுத்தல் காரணம் மலையக மக்களுக்கு 1000 ரூபா சம்பளம். இன்று இம்மக்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதுடன் பாரிய காட்டிக்கொடுப்பே இடம் பெற்றுள்ளது. இவ்விடயத்தில் வடிவேல் சுரேஸின் நியாயப்படுத்தல் என்ன என பாராளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் கேள்வியெழுப்பினார்.
பொதுஜன பெரமுன முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இவ்வாறு கட்சி தாவல்களில் ஈடுப்பட்டும் எவ்விதமான மாற்றங்களும் மலையக மக்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இவர்களின் பிரதான நோக்கம் எவர் ஆட்சி செய்தாலும் தமக்கு ஒரு பதவி கிடைக்க வேண்டும் என்பது மாத்திரமே தவிர தன்னை தெரிவு செய்த மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற வேண்டும் என்பது அல்ல ஆகவே இனியாவது மலையக மக்கள் அரசியல் ரீதியில் ஒரு முறையான தீர்மானங்களை முன்னெடுக்க வேண்டும்.தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஒரு படிப்பினையாக கொள்ள வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM