(செய்திப் பிரிவு)
மாகாணசபை தேர்தல் முறையில் இன விகிதாசாரத்தை இல்லாமல் செய்ய வேண்டுமென்ற நிலவரம் தோன்றி அதற்கு பாரிய எதிர்ப்பு சிறுபான்மை சமூகங்களிலிருந்து வெளிப்பட்டதன் விளைவாக, இப்பொழுது அமைச்சரவையில் ஏற்கெ னவே செய்யப்பட்ட திருத்தம் மாற்றியமைக்கப்படுவதற்கான முன்மொழிவுகள் வைக்கப்பட்டுள்ளமை வரவேற்கதக்க விடயமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
பண்டாரகம, அட்டுலுகம, அல் கஸ்ஸாலி மத்திய மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்லங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எங்களது பெறுமதியான வாக்குகளை இரண்டு, மூன்று கட்சிகளுக்கு பிரித்து கொடுப்பதனால் பெரிய தவறை செய்கின்றோம். ஆனால், விகிதாரசார தேர்தல் முறைமையை சரிவர பயன்படுத்த முடியுமாக இருந்தால் பெரிய கட்சிகளோடு சரியான பேச்சுவார்த்தையை நடத்தி இந்த விடயங்களில் நாங்கள் எவ்வாறான அடைவுகளை அடைய வேண்டும் என்பதில் எங்களுக்கு மத்தியில் ஒரு தெளிவும் சரியான அணுகுமுறையும் அமையப் பெற வேண்டுமென்பது அவசியமாக இருக்கின்றது.
பிரதமரோடு மாகாண சபை தேர்தல் குறித்து பேச்சுவார்த்தையொன்று ஏற்பாடாகியிருக்கின்ற காரணத்தினால், அதில் கலந்துகொண்டு முக்கிய விடயங்களை கலந்தாலோசிக்க வேண்டியிருக்கின்றது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM