வவுனியா மாவட்டத்தில் சட்டவிரோதமான கள்ளு மற்றும் சாராய விற்பனை, கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனைகளில் ஈடுபட்டவர்கள், கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனைகளில் ஈடுபட்டவர்கள் மீது கடந்த வருடத்தில் மாத்திரம் 545 வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட மதுவரி திணைக்களத்தின் பொறுப்பதிகாரி அசோக திலகரட்ண தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் வரிசெலுத்தாமல் பீடிகள் விற்பனை செய்யபட்டமைக்காக 3 வழக்குகளும், சட்ட விரோதமாக கள்ளுவிற்பனை செய்தமைக்காக 270 வழக்குகளும், அனுமதிபத்திரம் இன்றி கள்ளை வைத்திருந்தமைக்காக 15 வழக்குகளும், அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்தமைக்காக 35 வழக்குகளும். கஞ்சா வைத்திருந்தமைக்காக 5 வழக்குகளும், சட்டவிரோத வடிசாரயத்தை உடைமையில் வைத்திருந்தமைக்காக 3 வழக்குகளும், அனுமதியின்றி வெளிநாட்டு மதுபானங்கள் வைத்திருந்தமைக்காக மூன்று வழக்குகளும், அனுமதியின்றி பீடியினை உற்பத்திசெய்தமைக்காக 6 வழக்குகளும், 21 வயதிற்கு கீழ்பட்டவர்களிற்கு புகைத்தல் பொருட்களை விற்பனை செய்தமைக்காக 154 வழக்குகளும், பொது இடத்தில் புகைத்தமைக்காக 54 வழக்குகளும், தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த குற்றசாட்டுகளுடன் தொடர்புடையவர்களிற்கு எதிராக வவுனியா நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யபட்டதுடன் அவர்களிற்கான தண்டபணமாக 56 இலட்சம் ரூபாய் அறவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM