வவுனியாவில் தவணை முறையில் மோட்டார் வண்டி ஒன்றை வாங்கியிருந்த ஆசிரியை ஒருவரிடமிருந்து அடாத்தான முறையில் அவ் வண்டியை லீசிங் நிறுவனத்தினர் பறித்த சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா பண்டாரிக்குளத்தில் வசித்துவரும் ஆசிரியை ஒருவர் அங்குள்ள லீசிங் நிறுவனமொன்றில் தவணை முறையில் பணம் செலுத்தி மோட்டார் வண்டியொன்றை கொள்வனவு செய்திருந்தார்.
குறித்த ஆசிரியை ஒழுங்கான முறையில் பணம் செலுத்திவந்த நிலையில் இறுதியாக செலுத்த வேண்டிய ஏழு ஆயிரம் ரூபா தவணை பணத்தை செலுத்தத் தவறிய நிலையில், நேற்று மாலை 6 மணியளவில் ஆசிரியையின் வீட்டிற்கு சென்ற நபரொருவர் தனது மகளுக்கு பிரத்தியோக வகுப்பு எடுக்க வேண்டும் என தெரிவித்து வவுனியா நகருக்கு ஆசிரியையை அழைத்துச்சென்று மோட்டார் வண்டியை பறிமுதல் செய்ததுடன் குறித்த ஆசிரியையை தகாத வார்த்தைப் பிரயோகத்தின் மூலம் திட்டியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த பாதிக்கப்பட்ட ஆசிரியை, குறித்த நிறுவனத்தில் தவணை முறைப்பணத்தை ஒழுங்காக செலுத்திவந்த நிலையில் பணம் முழுவதும் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மோட்டார் வண்டியின் உரிமைப்புத்தகம் நிறுவனத்தால் வழங்கப்படும் என தெரிவித்திருந்தனர்.
ஆறு மாதங்கள் கடந்த நிலையில் திடீரென நீங்கள் 40 ஆயிரம் ரூபா பணம் செலுத்த வேண்டும் என தெரிவித்து இன்று என்னை ஏமாற்றி அடாத்தான முறையில் எனது வண்டியை அபகரித்துள்ளனர். இவ் விடயம் சம்பந்தமாக நான் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன் என தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM