மாலி நாட்டில் இம்மாதம் 25 ஆம் திகதி ஐக்கிய நாட்டு அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தவேளையில் உயிரிழந்த இலங்கை இராணுவ வீரர்கள் இருவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அதன்பிரகாரம், இலங்கை இராணுவத்தின் 11 ஆவது இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த கெப்டன் எச்.டப்ள்யூ.டீ ஜயவவிக்ரம மற்றும் முதலாவது பொறிமுறை காலாட் படையணியைச் சேர்ந்த கோப்ரல் எஸ்.எஸ். விஜயகுமார ஆகிய இருவரும் முறையே மேஜர் மற்றும் சார்ஜன்ட் ஆகிய தரங்களுக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இவர்கள் இருவருடைய பூதவுடல்களும் நாளை கட்டுநாயக்க, பண்டாரநாயக சர்வதேச விமானநிலயத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விரு அமைதிகாக்கும் படை வீரர்களும் கடந்த வெள்ளிக்கிழமை (25) ஆம் திகதி மாலி நாட்டில் கீறன பகுதியில் ஐக்கிய நாட்டு அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையில் நடத்தப்பட்ட பாரிய குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM