(எம்.எப்.எம்.பஸீர்)
இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 33.9 மில்லியன் ரூபா பணத்தை நம்பிக்கை மோசடி செய்தமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பிரதிவாதிகளுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை நிரந்தர விசேட மேல் நீதிமன்றில் விசாரிக்க முடியுமா? முடியாதா? என்பது குறித்து தீர்மானம் எதிர்வரும் 11 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.
இந்த வழக்கு விசாரணைகளில் பிரதிவடஹிகள் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள அடிப்படை ஆட்சேபனம் மற்றும் அரச தரப்பின் பதில் ஆகியவற்றை ஆராய்ந்து எதிர்வரும் 11 ஆம் திகதி இந்த தீர்ப்பை அரிவிப்பதாக விஷேட மேல் நீதிமன்றம் நேற்று அறிவித்தது.
கடந்த ஜனவரி 22 ஆம் திகதி கோத்தாபய மற்றும் ஏனைய பிரதிவடஹிகள் சார்பில் இம்மனுவை விஷேட மேல் நீதிமன்று விசாரிக்க முடியாது என்ர தர்க்கம் முன்வைக்கப்ப்ட்டது. இதற்கு பதிலளிக்க சட்ட மா அதிபர் சார்பில் ஒரு வார கால அவகாசம் கோரப்ப்ட்டிருந்தது. அதன்படி நேற்று மீள சட்ட மா அதிபரின் பதில் வாதத்துக்காக இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இதன்போது, பிரதிவாதிகள் மன்றில் ஆஜராகியிருந்த நிலையில்,
பிரதி சொலிசிட்டர் ஜெனரால் வசந்த பெரேரா, சிரேஷ்ட அரச சட்டவாதி உதார கருணாரத்ன ஆகியோருடன் ஆஜராகிய சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் எதிர் வாதத்தை முன்வைத்தார்.
' இந்த மன்றுக்கு அனுப்பபடும் வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பு பிரதம நீதியரசரால் இம்மன்றின் மீது சாட்டப்பட்டுள்ளது. அதனால் இங்கு அனுப்பப்படும் வழக்குகளை விசாரிக்க இந்த நீதிமன்றம் கடமைப் பட்டுள்ளது. அதனால் பிரதிவாதிகளின் அடிப்படை ஆட்சேபனத்தை நிராகரித்து வழக்கை விசாரிக்க வேண்டும்' என சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் இதன் போது பதில் வாதத்தை முன்வைத்தார்.
33.9 மில்லியன் ரூபா பணத்தை நம்பிக்கை மோசடி செய்தமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 சந்தேக நபர்களுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை கடந்த ஜனவரி 22 முதல் நாளாந்தம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மூவரடங்கிய நிரந்தர விசேட மேல் நீதிமன்றம் கடந்த 17 ஆம் திகதி தீர்மனைத்து இருந்தது. எனினும் அன்றைய தினம் பிரதிவாதிகள் முன்வைத்த அடிப்படை ஆட்சேபனம் காரணமாக அவ்வழக்கு நேற்றும் விசாரணைக்கு வந்தது. விஷேட மேல்நீதிமன்ற தலைமை நீதிபதி சம்பத் அபேகோன், நீதிமதிகளான சம்பத் விஜேரத்ன, சம்பா ஜானகி ராஜரத்ன ஆகியோர் முன்னிலையில் நேற்று முற்பகல் 9.30 மணிக்கு இவ்வாறு விசாரணைக்கு வந்தது.
விஷேட மேல் நீதிமன்றின் 2 ஆம் வழக்காக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய, காணி மிட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் லியன ஆரச்சிகே பிரசாத் ஹர்ஷான் டி சில்வா, அக்கூட்டுத்தாபண பனிப்பாளர் சபை உறுப்பினர்களான கமஎத்தி ராலலாகே சந்ரா உதுலாவத்தி கமலதாஸ, சுதம்மிக கேமிந்த ஆட்டிகல, சமன்குமார அப்ரஹாம் கலப்பத்தி, மாறுக்கு தேவகே மஹிந்த சாலிய, மதம்பெரும ஆரச்சிலாகே ஸ்ரீமத்தி மல்லிகா குமாரி சேனாதீர ஆகியோர் ஒன்று முதல் 7 வரையிலான சந்தேக நபர்களாக முறையே பெயரிடப்பட்டுள்ளனர்.
கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதிக்கும் 2015 பெப்ரவரி 2 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபணத்துக்கு சொந்தமான 33.9 மில்லியன் ரூபாவை செலவழித்து வீரகெட்டிய - மெதமுலன டீ.ஏ. ராஜபக்ஷ யாபகார்த்த கோபுரத்தை நிர்மானிக்க சதி செய்ததாக அனைத்து பிரதிவாதிகளுக்கும் எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த ஞாபகார்த்த கோபுரம், நூதனசாலையை நிர்மாணிக்கும் போது குறித்த 33.9 மில்லியன் ரூபாவை தவறாக பயன்படுத்தியதாக காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி ஆணைக் குழுவின் அப்போதைய தலைவர் மற்றும் பனிப்பாளர் சபை உறுப்பினர்களான 2 முதல் 6 வரையிலான பிரதிவடஹிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதற்கு உதவி ஒத்தாசை புரிந்ததாக முதல் பிரதிவடஹியான கோத்தாபய மீதும் 7 ஆம் பிரதிவடஹி மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
1982 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டம் மற்றும் தண்டனை சட்டக் கோவைகளின் பிரகாரம் இக்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தது
இந் நிலையில் இந்த வழக்கை விசாரிக்க விஷேட மேல் நீதிமன்றுக்கு 2018 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நீதிமன்ற கட்டமைப்பு திருத்தச் சட்டம் பிரகாரம் அதிகாரம் இல்லை என்ர பிரதிவாதிகளின் அடிப்படை ஆட்சேபனம் தொடர்பில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் தமது வாதங்களை நேற்று முன்வைத்தார்.
'இந்த மன்றுக்கு முன்வைக்கபப்டும் வழக்குகளை விசாரிக்கவே பிரதம நீதியர்சர் இந்த மன்றை நியமித்துள்ளார். அதனால் இங்கு முன்வைக்கப்படும் வழக்குகளை விசாரிக்காமல் இருக்க இம்மன்றுக்கு அதிகாரம் இல்லை.
இம்மன்றில் முன்வைக்கும் ஒரு வழக்கை மீளப் பெற சட்ட மா அதிபருக்கு அதிகாரம் இல்லை. அதனைப் போன்றே மன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்காமல் இருக்க இம் மன்றுக்கும் அதிகாரமில்லை. நீதிமன்ற அமைப்பு திருத்தச் சட்டம் பிரகாரம் சில வழக்குகளை இம்மன்றினால் விசாரிக்க முடியாது என பிரதிவாதிகள் தரப்பில் கூறப்பட்டாலும், பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டம் மற்றும் கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க இம்மன்றுக்கு அதிகாரம் உள்ளது. ' என சுட்டிக்காட்டினார்.
இதன்போது கடந்த 17 ஆம் திகதி சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் முன்வைத்த , நீதிமன்றம் ஊடக நாடகங்களை அரங்கேற்றும் இடமல்ல, மன்றுக்கு வரும் சாட்சியாளர்களின் பாதுகபபை உறுதி செய்யுங்கள் ஆகிய வாதங்களை முன்னிருத்தி வழக்குடன் சம்பந்தப்படாத ஒரு சட்டத்தரணி முறைப்பாட்டாளர் தரப்பு ஒருவருக்கு உள்ள கருத்துரிமையை ரத்து செய்ய முயல்வதாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளதாகவும் அதனால் அவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதிலிருந்து அவர்களை தடுத்து உத்தர்விடுமாறும் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் மன்றைக் கோரினார்.
இதன்போது கோத்தாபய ரஜபக்ஷ சார்பில் மன்ரில் ஆஜரான சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, நீன்ட விளக்கமளித்து, பிரதிவடஹிகள் சார்பிலான எந்த சட்டத்தரனியும் அப்படியான கருத்தினை ஊடகங்களுக்கு கூறவில்லை என கூறினார்.
இதன்போது திறந்த மன்றில் பேசிய தலமை நீதிபதி சம்பத் அபேகோன், இம்மன்றுக்கு வரும் சட்டத்தரணிகள் உட்பட அனைவரும் மன்றின் கெளரவத்தை பாதுகாப்பர் என நம்புவதாகவும், அவ்வாறு பாதுகாக்க தவபவர்கள் தொடர்பில் தேவையான நீதிமன்ற உத்தர்வுகள் மன்றினால் வழ்னக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டினார். அத்துடன் சாட்சியாளர்களின் பாதுகப்பு தொடர்பில் தேவைப்படும் போது உரிய நேரத்தில் உத்தரவுகளை பிறப்பிக்கவும் இம்மன்றினால் முடியும் என அவர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து மீளவும் மன்றில் வாதிட்டசட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா,
2018 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நீதிமன்ற கட்டமைப்பு திருத்தச் சட்டம் பிரகாரம் இந்த விஷேட மேல் நீதிமன்றுக்கு பாரிய நிதி மற்றும் பொருளாதார மோசடி தொடர்பிலான வழக்குகளை மட்டுமே விசாரிக்க முடியும். இந்த வழக்கு அந்த பட்டியலுக்குள் சேராது. இவ்வழக்கு சாதாரண மேல் நீதிமன்றில் விசாரிக்கப்படல் வேண்டும்.
பிணைமுறி மோசடி போன்ற வழக்குகளையே இந்த மன்றில் விசாரிக்க முடியும். சட்ட மா அதிபர் சார்பில் இவ்வழக்கை இம்மன்று விசாரித்தே ஆக வேண்டும் எனக் கூறினாலும் இவ்வழக்கை தம்மால் விசாரிக்க முடியுமா முடியாதா என்பதை இம் மன்றே தீர்மானிக்க வேண்டும். என வாதிட்டார்.
இதனையடுத்தே இவ்வழக்கை இம்மன்றினால் விசாரிக்க முடியுமா முடியாதா என்ற தீர்ப்பை எதிர்வரும் 11 ஆம் திகதி அறிவிப்பதாக கூறி வழக்கை அத்திகதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM