பாடசாலை நேரத்தில் தனியார் பிரத்தியேக வகுப்புகளில் ( டியூசன்) மாணவர்கள் செல்வதைத் தடுப்பதற்கு புதிய ஒழுங்குவிதிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் உத்தேசிக்கிறது.
பாடசாலை நேரத்தில் பிரத்தியேக வகுப்புகளில் மாணவர்கள் கலந்துகொள்வதைத் தடுக்கவும் அத்தகைய வகுப்புகள் நடத்தப்படுவதை தடுக்கவும் அமைச்சரவையில் யோசனை சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவாசம் தெரிவித்தார்.
பாடசாலை நேரத்தில் தனியார் வகுப்புகளில் க.பொ.த.உயர்தர வகுப்பு மாணவர்கள் கலந்துகொள்வதால் பாடசாலைகளில் உயர்தர வகுப்புகளில் மாணவர்கள் வருகை வீழ்ச்சியடைந்திருப்பதாகக் கிடைக்கப்பபெற்ற பெருவாரியான முறைப்பாடுகளை அடுத்தே இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க உத்தேசிக்ப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
ஆனால், இரண்டாம் தடவை பரீட்சைக்குத் தோற்றுவதற்காக மீட்டல் வகுப்புகளில் பங்கேற்கின்ற மாணவர்களுக்கு இந்த ஒழுங்குவிதிகள் பிரயோகிக்கப்படமாட்டாது.
போயாதினங்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மதபோதனை வகுப்புகளுக்கு மாணவர்கள் செல்வதை ஊக்குவிக்கும் நோக்கில் அந்த இரு நாட்களிலும் தனியார் பிரத்தியேக வகுப்புக்களை தடைசெய்வதற்கான திட்டத்துக்கு மேலதிகமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பாடசாலைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் ஆரிரியர்களையும் அதிபர்களையும் நியமிப்பதற்கும் பெருமளவு நிதி செலவிடப்படுகின்ற போதிலும், பாடசாலைகளில் மாணவர்கள் வருகையில் காணப்படுகின்ற வீழ்ச்சி கல்வி முறையைப் பெரிதும் பாதிக்கின்றது என்று கூறிய அமைச்சர் காரியவாசம் பாடசாலைகளில் ஆசிரியர்கள் தட்டுப்பாடாக இருப்பதால் பாடவிதானங்களை நிறைவுசெய்யமுடிவதில்லை.
அதன் காரணத்தினாலேயே மாணவர்கள் பிரத்தியேக வகுப்புக்களை நாட நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்ற கல்வித்துறை சார் தொழிற்சங்கங்களின் குற்றச்சாட்டை நிராகரித்தார்.
ஆனால் , பாடசாலைகளில் உள்ள குறைபாடுகள் காரணமாகவே மாணவர்கள் தனியார் வகுப்புக்களினால் கவரப்டுகிறார்கள் என்று தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM