கிளிநொச்சியில் பெண் ஒருவரை கத்தியால் காயப்படுத்தி பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. கிளிநொச்சி அம்பாள்குளத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் பூநகரியில் உள்ள ஒருவருக்கு வழங்க வேண்டிய பணத்தை மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்றுள்ளார். அவரைத் திடீரென வழிமறித்த இருவர் அவரிடம் இருந்து பணப் பையைப் பறிக்க முயன்றுள்ளனர். அவர் அதைத் தடுக்க முயன்றபோது கத்தியால் குத்திவிட்டு பணத்தை அபகரித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
எனினும் 19 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்துச்சென்றுள்ளதாக பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.
வயிற்றுப் பகுதியில் இரு தடவைகள் கத்தியால் குத்திவிட்டு, கொள்ளையிட்டவர்கள் கத்தியை அவரது வயிற்றில் சொருகியவாறு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
வயிற்றில் கத்தி குத்தப்பட்ட நிலையில் வீதியில் விழுந்து கிடந்த பெண்ணை அந்தப் பகுதியால் வந்த மீன் வியாபாரி ஒருவர் அவதானித்துள்ளார். அவர் உடனடியாக நோயாளர் காவு வண்டிக்கும், பொலிஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
இவ்வாறு மீட்கப்பட்ட பெண்ணை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வருகின்றார்.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM