மறைந்த மாதுலுவாவே சோபித தேரரின் தேகம் தொடர்பில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளாமை உள்ளிட்ட சில விடயங்கள் குறித்து வைத்திய நிபுணர்களின் குழு ஊடாக விசாரணைகளை நடத்தி விரைவில் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் அனில் ஜாசிங்கவிற்கே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உடுவே தம்மாலோக தேரரினால் கடந்த மார்ச் 26 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டது.
சோபித தேரருக்கு வழங்கிய சிகிச்சை குறித்த வைத்திய அறிக்கை காணாமல் போனமை மற்றும் சடலம் தொடர்பில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளாமை போன்ற விடயங்களை முன்வைத்து, அவரது மரணம் சந்தேகத்திற்குரியது என தம்மாலோக தேரர் குற்றப் புலனாய்வு பிரிவில் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து விசாரணைகளை முன்னெடுத்த அவர்கள் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் குறித்த தகவல்களை வழங்கியிருந்தனர். இதன்படி விடயங்களை ஆராய்ந்த நீதவான் சோபித்த தேரருக்கு வழங்கிய சிகிச்சை பற்றி குறித்த வைத்தியசாலை பணிப்பாளரிடம் தகவலை பெற்று அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.
அத்துடன் இறப்புச் சான்றிதழில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளாமை தொடர்பில் விரைவில் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் குறிப்பிட்டுள்ளார். இந்த விசாரணைகளை கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட நிபுணர் குழுவினரால் மேற்கொள்ளுமாறும் அவர் பணித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM