"ஊடகவியலாளர்கள் படுகொலை - கடத்திக் காணாமல் ஆக்கப்பட்டமை - தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பான விசாரணைகள் அரசியல் அழுத்தம் காரணமாக முடங்கியுள்ளன. ஊடகவியலாளர்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்ட குற்றவாளிகள் இன்னமும் சுதந்திரமாக நடமாடுகின்றனர். அவர்களுக்கு எதிராக சட்டம் செயற்படவில்லை. எனவே, இந்த விடயத்தில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு தலையிட்டு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் 8 ஊடக அமைப்புகள் இன்று கூட்டாகக் கோரிக்கை விடுத்தன.
ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முற்பகல் தேசிய பொலிஸ் ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம், சுதந்திர ஊடக அமைப்பு, ஊடக ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், இலங்கை இளம் ஊடகவியலாளர்களின் சங்கம், சமூக வலைத்தள ஊடக செயற்பாட்டாளர்கள், ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் ஆகிய 8 ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் சார்பில் அதன் தலைவர் சட்டத்தரணி பி.எச். மனதுங்க, செயலாளர் டி.எம்.எஸ். திஸாநாயக்க உட்பட மூவர் கலந்துகொண்னர்.
இதன்போது ஊடகவியலாளர்களுக்கு எதிராக கடந்தகாலங்களில் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்த அடக்குமுறைகளைப் பட்டியலிட்டுக் காட்டிப் பேசிய ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள், பொலிஸ் ஆணைக்குழுவிடம் கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.
மேலும் இது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட வேண்டும் என்று ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியதுடன் மகஜரொன்றையும் பொலிஸ் ஆணைக்குழுவிடம் அவர்கள் கையளித்தனர்.
இதையடுத்து 8 ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகளும் கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்துக்கும் சென்று அங்கு நின்ற அதிகாரியிடம் மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM