(எம்.மனோசித்ரா)
பாராளுமன்றத்தில் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி 9 உறுப்பினர்கள் காணப்படுகின்றனர். எனினும் கூட்டு ஒப்பந்தம் தொழிற்சங்கங்களின் பொறுப்பாகும், அதில் நாம் தலையிட முடியாதெனக் கூறி ஏனையோர் விலகிக் கொண்டனர். இவ்வாறிருக்கையில் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கும் ஏனைய சில தரப்பினருக்கு இந்த ஒப்பந்த்தில் என்ன வகிபாகம் உண்டு என இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயளாலரும் இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கடந்த சில மாதங்களாக சுமார் 27 சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அத்தோடு நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. அனைவரும் ஒருமித்த கோரிக்கை 1000 ரூபா அடிப்படை சம்பளம் என்பதாகவே காணப்பட்டது. எனினும் இடைப்பட்ட ஒரு தொகையினையே எம்மால் பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளது.
அடிப்படை சம்பளத்துடன் அனைத்து கொடுப்பனவுகளையும் சேர்த்து 855 ரூபா நாளொன்றுக்கான சம்பளமாக கிடைக்கப்பெறும் அதேவேளை, மேலதிகமாக சராசரியாக 10 கிலோ கொழுந்தினை பறிக்கும் தொழிலாளியொருவருக்கு நாளொன்றுக்கு 1255 ரூபாவினைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
எனினும் இதனை புரிந்து கொள்ளாத சிலர் எம்மில் குறை காண்பதிலேயே தமது கவனத்தைச் செலுத்தி வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM