நுரைச்சோலை அனல் மின்நிலையம் தொடர்பான சூழல்-தாக்க பகுப்பாய்வு அறிக்கையில் பல விடயங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நிலக்கரி மற்றும் சாம்பல் குடியிருப்புக்கள் மற்றும் விவசாய நிலங்களை நோக்கி பரவாமல் தடுப்பதற்கு பெரிய மரங்கள் நாட்டப்படவேண்டும் . அதேபோன்று கடல் அல்லது ஏனைய நீர்நிலைகளில் அனல் மின் நிலைய கழிவு நீர் கலக்கப்படாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் நுரைச்சோலை அனல் மின் நிலையம் பகுப்பாய்வு அறிக்கையின் வலியுறுத்தல்களை மீறியுள்ளது. பருவக்காற்று தரைப்பகுதியினை நோக்கி வீசும் போது , மக்களின் வாழ்வாதாரமும் சுகாதாரமும் மிக மோசமாகப் பாதிக்கப்படுகின்றது.
அத்துடன் நிலக்கரியினை பயன்படுத்தும் போது உருவாகும் சாம்பல் பொது மக்களின் இருப்பிடங்களை நோக்கி காற்றில் கலந்து சென்று படிகின்றன . இதனால் கடுமையான சுகாதார பிரச்சினைகளை எதிர் கொள்ளும் நிலை அந்த மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கையும் இதனால் பாதிக்கப்படுகின்றது. சீருடைகளை கழுவி உலரவைக்க முடியாத நிலையில் அப்பிரதேசத்தின் மாணவர்கள் உள்ளனர். நுரைச்சோலை அனல் மின்நிலையத்திலிருந்து உருவாகும் சாம்பல் சீமெந்து உற்பத்திக்குக் கூட பயனற்றது என தெரிவித்து திருப்பியனுப்பும் நிலையே இன்று காணப்படுகின்றது.
இதனால் சாம்பல் அனல் மின் நிலையத்திற்கு அருகில் கடலுக்கு அண்மித்த பகுதியில் கொட்டப்படுகின்றது. மேலும் சல்பர் வாயு, நைதரசன் வாயு, தூசுப் படிவுகள் போன்றவற்றின் தாக்கத்தினை கட்டுப்படுத்த எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வழமைக்கு மாறான வெப்பம் நிலத்து நீரிலும் கடல் நீரிலும் காணப்படுவதாக அப்பகுதி மீனவர்களும் பொது மக்களும் கூறுகின்றனர்.
குடிநீருக்காக பயன்படுத்தப்படும் கிணற்று நீரின் நிறம் வெண்மை கலந்து மஞ்சல் நிறமாக காணப்படுவதுடன் , அந்த நீரை பயன்படுத்த முடியாத நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் போத்தல்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் குடிநீரையே இவர்கள் பயன்படுத்துகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM