(ஆர்.விதுஷா)
காலி - கல்வடுகொட புகையிரத நிலையத்திற்கு அருகில் இளைஞரொருவர் புகையிரதத்திற்கு முன் குதித்து தற்கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று முற்பகல் 11.45 மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில் பொலிசார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கண்டியிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த புகையிரதத்தின் முன் குதித்தே குறித்த இளைஞன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
உயிரிழந்தவர் 21 வயதுடைய காலி கராப்பிட்டிய பகுதியை சேர்ந்த ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கராப்பிட்டிய வைத்திய சாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் குறிப்பிட்டனர்.
இவ்வாறு புகையிரத்தில் குதித்து தற்கொலை செய்தமைக்கான காரணங்கள் இது வரையில் கண்டறியப்படாத நிலையில் காலி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM