மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு அவர் பயன்படுத்திய பொருட்களை கொண்டு நினைவு சின்னம் அமைக்க உள்ளதாக டெல்லி கலாசார மந்திரி கபில் மிஸ்ரா தெரிவித்தார்.
அவரின் மறைவிற்கு பின்னர் டெல்லியில் அவர் தங்கி இருந்த இல்லத்தில் இருந்து அவருடைய பொருட்கள் ராமேசுவரத்துக்கு எடுத்து செல்லப்பட்டன. இந்த நிலையில் ராமேசுவரத்தில் இருந்து கலாமின் பொருட்களை எடுத்து வந்து டெல்லியில் அவருக்கு நினைவு சின்னம் அமைக்க தீர்மானித்துள்ளனர்.
அப்துல் கலாம் இறந்த பிறகு அவருடைய பொருட்களை மத்திய அரசு ராமேசுவரத்துக்கு அனுப்பி விட்டது.இன்று அந்த பொருட்களை லாரி மூலம் டெல்லிக்கு எடுத்து வர இருக்கிறோம். கலாம் பயன்படுத்திய புத்தகங்கள், வீணை உள்ளிட்ட இசைக்கருவிகள், மூக்கு கண்ணாடிகள் போன்ற அவருடைய பொருட்கள் அனைத்தையும் பயன்படுத்தியே அவரின் நினைவு சின்னம் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவை அனைத்தும் டெல்லி சட்டசபைக்கு கொண்டு வரப்படும். பின்னர் டெல்லியில் உள்ள தில்லி ஹாட் மார்க்கெட் பகுதியில் கலாமுக்கு நிரந்தர நினைவு சின்னம் கட்டப்பட்டு அவருடைய பொருட்கள் அனைத்தும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM