(எம்.மனோசித்ரா)
கொழும்பு உட்பட பல பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக இன்று கையெழுத்திடப்படவிருந்த 700 ரூபாவுக்கான கூட்டு ஒப்பந்தம் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த தகவலை முதலாளிமார் சம்மேளனத்தின் அதிகாரி ஒருவர் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் தெரிவித்ததாகவும் எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.
புதிய கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடக் கூடாது எனத் தெரிவித்தும் இராஜகிரியவில் அமைந்துள்ள முதலாளிமார் சம்மேளனத்திற்கு முன்பாக ' 1000 ரூபா இயக்கம் " பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை இன்று காலை 10 மணி முதல் முன்னெடுத்திருந்தது.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் அங்கு பாதுகாப்பு சேவையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பாட்டதையடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது மகஜர் ஒன்றை தொழிற்சங்கங்களிடம் ஒப்படைக்காமல் முதலாளிமார் சம்மேளனத்திடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையிலேயே கூட்டுஒப்பந்தம் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM