மோசடியில் ஈடுபட்ட சமுர்த்தி உத்தியோகத்தர் இடை நீக்கம்

Published By: Vishnu

28 Jan, 2019 | 10:40 AM
image

முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி உத்தியோகத்தராகப் பணியாற்றிய நிலையில் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பணியாளர் ஒருவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில்  சமுர்த்தி உத்தியோகத்தராகப் பணியாற்றிய நிலையில் பயனாளிகளின் பெயரில் கடன் பதிவு செய்யப்பட்டபோதும் உரிய பயனாளிக்கு வழங்காது. அதனை மோசடியாக கையாடல் செய்தார் என ஓர் பணியாளர்மீது மோசடி குற்றச்சாட்டு கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் சுமத்தப்பட்டது. 

இவ்வாறு மோசடிக்   குற்றச் சாட்டு சுமத்தப்பட்ட ஊழியர் உடனடியாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டு  அவை தொடர்பான விபரங்கள் சமுர்த்தி அதிகார சபைக்கும் அறிவிக்கப்பட்டது.

அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட விபரங்களின் அடிப்படையில் ஆரம்ப விசாரணைகள் இடம்பெற்றன. அவ்வாறு இடம்பெற்ற விசாரணைகளின் அடிப்படையில் முதல் கட்ட முடிவு தற்போது மாவட்டச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையிலேயே அனுப்பி வைக்கப்பட்டது விபரங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர் உடனடியாக பணியில் இருந்து இடைநிறுத்துமாறு எழுத்தில் அறுவுறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் மாவட்ட செயலக அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே குறித்த உத்தரவின் பிரகாரம் மேற்படி உத்தியோகத்தர் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59