மேற்கிந்திய தீவுகள் நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் ஒலிவியா கேரன்ஜ் உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டியில் வெற்றிப்பெற்ற மேற்கிந்திய தீவுகள் மகளிர் மற்றும் ஆண்கள் அணிகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இவ்வாழ்த்தை அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் தெரிவித்துள்ளார்.
இருபதுக்கு இருபது உலகக்கிண்ணப்போட்டியில் வெற்றிப்பெற்ற மேற்கிந்திய வீரர்கள் உண்மையான சாம்பியன்ஸ் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இடம் பெற்ற ஆறாவது இருபதுக்கு 20 இறுதி போட்டியில் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத்தை முதல் முதலாக இரு முறை வென்ற ஒரே ஒரு நாடு என்ற பெருமையை மேற்கிந்திய தீவுகள் அணி பெற்றுள்ளது.
அதே போல் , 19 வயதிற்குட்பட்ட உலகக்கிண்ணத்தையும், மகளிர்க்கான இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத்தையும் மேற்கிந்தியதீவுகள் அணி கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
இது , மகளிர் அணி பெற்ற மாபெரும் வெற்றி எனவும் இந்த வரலாற்று முக்கியத்துவமான சந்தர்ப்பத்தில் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM