ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினை அண்டியப்பகுதியில் இரு குடிசைகள் இன்று(26) அதிகாலை வேளையில் இனந்தெரியாதோரால் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்குச் சொந்தமான காணியில் கடந்த எட்டு வருடங்களாக வசித்து வரும் குடியிருப்பாளர்களின் குடிசைகளே இவ்வாறு தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அங்கீகாரத்தினைப் பெற்று மேட்டு நிலப் பயிர்ச் செய்கையினை மேற்கொண்டு தமது ஜீவனோபாயத்தினை கடத்தி வரும் வருமானம் குறைந்த குடும்பங்களின் குடிசைகள் இன்று அதிகாலைவேளையில் தீயிடப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிளில் நள்ளிரவு வேளையில் வந்த கும்பலொன்றே குடிசைகளுக்கு தீயிட்டிருக்கலாம் என இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். தீயிடப்பட்ட சந்தர்ப்பத்தில் இக்குடிசைகளுக்குள் எவரும் இல்லை எனவும், அச்சந்தர்ப்பத்தில் இக்குடிசைகளில் வசித்து வந்தவர்கள் உறவினர்களில் இல்லங்களுக்குச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தீயிட்டுக் கொழுத்தப்பட்ட இக்குடிசைகளுக்குள் பெறுமதிமிக்க உடைமைகள் தீயில் அழிந்துள்ளதாகவும் இதனால் பெருந்தொகை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குடிசை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM