(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
பிரதான எதிர்க்கட்சி தலைவர் பதவி தமக்குரியது என சபையில் மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் அங்கீகாரம் கோரினார்.
எனினும் எதிர்க்கட்சி தலைவர் பதவி மஹிந்த ராஜபக்ஷவிற்கே உரியது என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் வாதாடினர். இந்நிலையில் புதிய அரசியல் அமைப்பு மூலமே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என சபாநாயகர் மற்றும் சபை முதல்வர் தெரிவித்தனர்.
பாராளுமன்றத்தில் இன்று காலை சபை கூடிய வேளையில் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து கேள்வி எழுப்பினார். இதன் போது, ஜனாதிபதி அரசாங்கத்தின் தலைவராகவும், அமைச்சரவை தலைவராகவும் உள்ளார்.
இப்போது எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர். ஒரே கட்சியின் தலைவர் அரசாங்கத்தின் தலைவராகவும் அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் எதிர்க்கட்சி தலைவராகவும் உள்ளனர்.
அவர் எதிர்க்கட்சி தலைவராக வந்திருக்காவிட்டிருந்தால் நாம் இது குறித்து பேசியிருக்க மாட்டோம். எனினும் இப்பொது ஒரு முரண்பாடு காணப்படுகின்றது.
பாராளுமன்ற நிலையியல் கட்டளை 334-335 இன் படி பாராளுமன்ற நடவடிக்கைகள் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட வேண்டும்.
அது சபையில் இரண்டாவது பாரிய கட்சியாக இருக்க வேண்டும். அதில் ஒருவரேனும் அரசாங்கத்துடன் அங்கம் வகிக்கக்கூடாது என குறிப்பிடப்படுகின்றது.
ஆகவே இந்த பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பே காணப்படுகின்றது. அரசியல் அமைப்பே நாட்டி உயரிய ஒன்று, இது தனி நபர்களின் தேவைக்காக பயபடுத்தக்கூடாது. அரசியல் அமைப்பை வைத்துக்கொண்டு சிறுபான்மை கட்சிகளையும் மக்களையும் பிழையாக வழிநடத்தப்படக்கூடாது. சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM