பண்டாரவளை பொது மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்டு 7 பேர் காயங்களுக்குள்ளாகிய நிலையில், பண்டாரவளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் குறித்து, பண்டாரவளைப் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட புகாரையடுத்து, குறிப்பிட்ட பொது மைதானத்திற்கு விரைந்த பொலிசார், முப்பது இளைஞர்களைக் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர், பண்டாரவளை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரென்று, பண்டாரவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சந்தன ஜயதிலக்க தெரிவித்தார்.
பண்டாரவளை பொது மைதானத்தில் உள்ளுர் பாடகர்கள் சிலரும், கொழும்பு பிரபல பாடகர்கள் சிலரும் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்வேளையில் நிகழ்ச்சியின் இறுதியில் இசை நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களாக கலந்துகொண்ட மதுபோதையில் இருந்த சிலருக்கும், இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்குமிடையே வாய்த்தர்க்கம், தாக்குதல்களும், மோதல்களும் ஏற்பட்டன.
இச்சம்பவத்தில் இசை உபகரணங்கள் பலவும், பலத்த சேதத்திற்குள்ளாகின. இந்நிலையில் இசை நிகழ்ச்சியில் பாடகர்களாக வந்திருந்த பலரும் ஓடித் தப்பினர். உள்ளுர் இளைஞர்கள் இப்பாடகர்களை துரத்தி துரத்தி தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.
இவ் இசை நிகழ்ச்சி, பண்டாரவளை மாநகர சபையின் அனுமதியுடன் நிதி சேகரிப்புக்காக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சந்தேக நபர்களை பண்டாரவளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM