ஹட்டன் மற்றும் பலாங்கொட பிரதான வீதியினூடாக செல்லும் பலாங்கொட தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுள் ஒரு சிலர், பேருந்துகளில் முறைகேடான முறையில் நடந்துக்கொள்வதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
அதாவது சில பயணிகள் மது அருந்திவிட்டு செல்லும் நிலையில் பெண்களிடமும் பாடசாலை மாணவர்களிடமும் முறைகேடான முறையில் நடந்துகொள்வதாகவும் இதனால் பெண்கள் மற்றும் சிறுவர்கள், மாணவர்கள் உடல் உள ரீதியான துன்புறுத்தலுக்குள்ளாகுவதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை பேருந்து சாரதிகள், நடத்துனர்கள் அறிந்திருந்தும் அதற்கு எதிராக எந்தவொரு செயற்பாடுகளையும் அவர்கள் முன்னெடுப்பதில்லை என பொது மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இது விடயமாக தனியார் பேருந்து சபை முன்வந்து இவ்வாறான சீர்கேடுகளை நீக்க முன்வருவதுடன், இச்சேவையில் ஈடுபடும் பேருந்து நடத்துனர்கள் மற்றும் சாரதிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வது அவசியம் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும் இது விடயமாக பொகவந்தலாவை பொலிஸ் நிலைய அதிகாரி கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM