(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
சிறுதோட்ட தொழிலாளர்களுக்கு போன்று பெருந்தோட்ட மக்களுக்கும் தோட்டங்கள் பிரித்துக்கொடுக்கப்படவேண்டும். அத்துடன் தோட்டங்கள் நஷ்டத்தில் செல்வதாக தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என விசேட அபிவிருத்தி திட்டங்களுக்கான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
பெருந்தோட்ட மக்களின் சம்பளப்பிச்சினைக்கு நியாயமான தீர்வொன்றை பெற்றுக்கொடுக்கவேண்டும்.
ஆயிரம் ரூபா வழங்க முடியுமாக இருந்தால் சந்தோஷம். என்றாலும் நியாயமான சம்பள அதிகரிப்பை மேற்கொள்ளவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அதேபோன்று சிறுதோட்ட மக்களுக்கு அந்த தோட்டங்களில் சுயாதீனமாக செயற்பட முடியுமாக இருக்கின்றபோதும் பெருந்தோட்ட மக்களுக்கு அந்த உரிமை இல்லை.
அதனால் சிறுதோட்ட மக்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும் சுதந்திரத்தை பெருந்தோட்ட மக்களுக்கும் வழங்குவதுடன் தேயிலை தோட்டங்கள் பெருந்தோட்ட மக்களுக்கும் பிரித்து வழங்கப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.
அத்துடன் கம்பனிகள் பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை 625 ரூபாவாக வழங்க ஒத்துக்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது. இது போதுமானதாக இல்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM