(ஆர்.யசி, எம். ஆர்.எம்.வசீம்)
எந்தக் கம்பெனியும் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறுவது பொய், அவ்வாறு நஷ்டத்தில் இயங்குவதாக கூறும் கம்பெனிகள் உடனடியாக தமது கம்பெனிகளை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். அவற்றை ஏற்க அரசாங்கம் தயார் என பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
எனினும் அந்த அறிவிப்பை எழுத்துமூலம் தோட்டக் கம்பனிகளுக்கு கொடுக்குமாறு திலகராஜ் எம்.பி.கோரியபோது மழுப்பி விட்டார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற தோட்டத்தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் பெருந் தோட்ட இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் உரையாற்றிய வேளையில் அப்போது மிகவும் உணர்ச்சிகரமாகப் பேசிய அவர் எந்தக் கம்பெனியும் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறமுடியாது. அவ்வாறு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றால் அந்தக் கம்பெனிகளை உடனடியாக அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். அவற்றை ஏற்க அரசாங்கம் தயாராக உள்ளது என்பதனை பெரும்தோட்ட இராயங்க அமைச்சர் என்ற வகையில் இங்கு கூறுகின்றேன் என்றார்.
இதன்போது குறுக்கிட்டு ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய திலகராஜ் எம்.பி. நீங்கள் இப்போது கூறிய விடயத்தை எழுத்து மூலம் 22 கம்பெனிங்களுக்கும் அறிவிக்க முடியுமா எனக் கேட்டார்
இதற்கு பதில் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ்:- இவ்விடயத்தை நான் பாராளுமன்றத்தில் பேசியுள்ளேன். அது ஹன்சாட்டில் வரும். அதனைவிட எழுத்து மூல அறிவிப்பு பெரிதல்ல என்றார்.
இதனையடுத்து மீண்டும் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய திலகராஜ் எம்.பி.:- எந்தக் கம்பெனியும் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறமுடியாது. அவ்வாறு நஷ்டம் எனக்கூறும் கம்பெனிகளை உடனடியாக அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும்.அவற்றை ஏற்க அரசாங்கம் தயார் என்பதனை பெரும்தோட்ட இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் இங்கு கூறுகின்றேன் என தெரிவித்து பேசிய உரை அடங்கிய ஹன்சாட் அறிக்கையை 22 கம்பெனிகளுக்கும் அனுப்புமாறு சபாநாயகரிடம் கோருகின்றேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM