(ஆர்.விதுஷா)
களுத்துறை, எகொடஉயன பகுதியில் எரிக்கப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் தொடர்பாக எகொடஉயன பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.50 மணியளவில் எகொடஉயன-ரங்வெலி மாவத்தையில் அமைந்துள்ள மர ஆலையொன்றிலிருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி ஆணின் சடலம் எரிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதுடன் , உயிரிழந்த நபர் கறுப்பு நிற காற்சட்டை அணிந்துள்ளமையும் இது வரையில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது தெரிய வந்துள்ளது.
சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் 30 இற்கும் 35 வயதிற்கும் இடைப்பட்ட ஒருவரின் சடலமாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே சடலம் கிடைக்கப்பெற்ற இடத்திற்கு பொலிஸ் பாதகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், சடலத்தை குறித்த பகுதியிலிரந்து எடுத்து பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நீதிமன்ற அனுமதியைப்பெறும் நடவடிக்கைகளை பொலிஸார் இன்றைய தினம் மேற்கொண்டுள்ளனர்
இதேவேளை குறித்த நபரின் உயிரிழப்பில் மர்மம் நிலவுவதால் இவை தொடர்பான விசாரணைகளை ஏகொடஉயன பொலிசார் வேறுபட்ட கோணத்தில் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM