தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு புதுமைகளை படைத்துவரும் வீரகேசரி நாளிதழ் இன்று முதல் புதிய அத்தியாயத்தில் காலடி எடுத்து வைக்கிறது. இந்தியாவில் அதிக விற்பனையில் உள்ள தமிழ் நாளிதழான தினத்தந்தி இன்று முதல் எமது வாசகர்களுக்காக எல்லை தாண்டிவந்து எம்மோடு இணைந்துகொள்கிறது. இன்றிலிருந்து எட்டுப்பக்கங்களைக் கொண்ட தினத்தந்தி இணைப்பிதழ் உங்கள் அபிமான வீரகேசரி நாளிதழுடன் வெளிவரவுள்ளது.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் இந்த இணைப்பிதழ் வெளிவரும் என்பதை எமது வாசகர்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
தினத்தந்தி நாளிதழ் 1942 ஆம் ஆண்டு சி.பா. ஆதித்தனாரால் மதுரையில் ஆரம்பிக்கப்பட்டு இற்றைக்கு 76 ஆண்டுகள் இந்திய வாழ் தமிழ் பேசும் மக்களுக்காக தனது ஊடகப்பணியினை செய்து வருகின்றது. 16 நகரங்களில் தனது பிரசுரங்களை அச்சிட்டு வெளியிடுவது மட்டுமன்றி ஐக்கிய அரபு நாடான டுபாயிலும் சர்வதேச பத்திரிகையாக அச்சிட்டு வெளியிடப்பட்டு வருகின்றது.
இதேபோன்றே 89 ஆண்டுகளாக இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு தனது ஊடகசேவையை ஆற்றிவரும் வீரகேசரி தினத்தந்தியுடன் இணைந்து உயர்ந்த ஊடகசேவையை எமது அபிமான வாசகர்களுக்கு வழங்க முன்வந்திருக்கின்றது. தினத்தந்தியுடன் இணைந்து வாசகர்களுக்கான சேவையை வழங்குவதற்கான செயற்றிட்டம் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழால் ஒன்றிணைந்து தமிழை வளர்க்கும் எண்ணப்பாட்டுடன் இந்த செயற்றிட்டம் ஆரம்பிக்கப்படுகின்றது.
எமது அயல்நாடான இந்தியாவானது இலங்கையுடன் பொருளாதார, கலாசார, சமூக ரீதியில் பாரிய பிணைப்புக்களைக் கொண்டுள்ள நாடாகும். எனவே அங்கு இடம்பெறுகின்ற அரசியல், சமூகம் சார்ந்த விடயங்களையும் முக்கிய நிகழ்வுகளையும் அறிந்துகொள்ளும் ஆர்வம் எமது வாசகர்களுக்கு இருக்கின்றது. அதனை நிவர்த்தி செய்யும் நோக்கிலேயே இந்தப் புதிய முயற்சியை வீரகேசரி நாளிதழ் ஆரம்பித்திருக்கின்றது. இந்தியாவின் குறிப்பாக தமிழகத்தின் அரசியல், சமூக , பொருளாதார, கலாசார, தொழில்நுட்ப, சினிமா துறைசார்ந்த விடயங்களையும் பல்சுவை அம்சங்களையும் இன்றும் முதல் கேசரியுடன் தினத்தந்தி இணைப்பிதழ் தாங்கிவரும் என்பதை மகிழ்வுடன் அறிவிக்கின்றோம்.
எமது ஈழத்திருநாட்டின் எழுத்துநடை, மொழிநடை என்பன தமிழகத்தின் எழுத்து, மொழி நடைகளுடன் ஒப்பிடுகையில் வித்தியாசமானவை. ஆனாலும் தமிழக எழுத்து நடையில் தினத்தந்தி அதே பாணியில் வெளிவரும் என்பதை எமது வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். தினத்தந்தி இணைப்பிதழ் மூலம் எமது வாசகர்கள் பயன்பெறுவார்கள் என்பது எமது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM