கடலில் மூழ்கி பிரான்ஸ் பிரஜை பலி 

Published By: Vishnu

23 Jan, 2019 | 04:34 PM
image

(ஆர்.விதுஷா)

அளுத்கமை - மொரகல்ல கடற்பரப்பில் நீராட சென்ற வெளிநாட்டு பிரஜையொருவர்  நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

குறித்த வெளிநாட்டுப்பிரஜை நேற்று மாலை 6.40 மணியளவில் மொரகல்ல கடற்பரப்பில் நீராடச்சென்றுள்ளார். அந்த சமயம்  கடல் நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் நீரில் மூழ்கியுள்ளார். 

இவ்வாறு  நீரில் மூழ்கிய வெளிநாட்டு பிரஜை  மீட்கப்பட்டு பேருவளை வைத்திய சாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர்  58 வயதடைய பிரான்ஸ் நாட்டை  சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக  பொலிசார்  தெரிவித்தனர். 

மேலும் உயிரிழந்த வெளிநாட்டு பிரஜையின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக களுத்துறை நாகொடை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன்.  

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கமை பொலிசார்  மெற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47