போர்த்துக்கல் கல்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 16.5 மில்லியன் யூரோ அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த 33 வயதான ரொனால்ட்டோ தற்போது இத்தாலியில் உள்ள யுவென்டஸ் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.
முன்னதாக அவர் 9 ஆண்டுகளாக ஸ்பெயினில் உள்ள ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காக விளையாடியதுடன் 2011 ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடுகையில் கிடைத்த வருமானத்தை குறைத்து காட்டி வருமான வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து மாட்ரிட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் நேற்றைய தினம் மாட்ரிட் நீதிமன்றத்தில் ஆஜரான கிறிஸ்டியானோ ரொனால்டோ குற்றத்தை ஒப்புக் கொண்டதுடன், நீதிமன்றம் விதித்த அபராத தொகையை கட்ட இணக்கம் தெரிவித்தார்.
ரொனால்டோ கால்பந்து வீரர்களில் அதிக சம்பளம் பெறும் வீரர்களில் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM