சட்டவிரோதமான முறையில் ஹொரோயின் போதைப்பொருட்களை தம்முடன் வைத்திருந்த ஐவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள சொகுசு அடுக்கு மாடித்தொடரிலுள்ள வீடொன்றில் இருந்து சுமார் 90 கிலோ கிராம் ஹெரோயினுடன் குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்டையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சுமார் ஆயிரது 80 மில்லியன் ரூபா பெறுமதியான 90 கிலோ கிராம் ஹொரோயினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் இருவர் அமெரிக்க நாட்டை சேர்ந்த 29 மற்றும் 49 வயதுடையவர்கள் எனவும் ஏனைய நபர் ஆப்கானிஸ்ன் நாட்டை சேர்ந்த 41 வயதுடைய நபரெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் ஹிக்கடுவ பகுதியை சேர்ந்த 41 மற்றும் 39 வயதுடைய இருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் பொலிஸ் விசேட அதிகாரிகள் ஒன்றிணைந்து குறித்த விடயம் சம்பந்தமாக தகவல்கள் பெற்று கைது செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு கிலோ வீதம் 90 பெக்கட்டுகளில் பொதி செய்யப்பட்டிருந்த 1080 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் தொகையே கைப்பற்றப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM