(நா.தனுஜா)
மட்டக்களப்பு ஸ்வாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிலையத்திற்கு 275 மில்லியன் ரூபா இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இந்தியாவுடன் இன்று திங்கட்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் அங்கமான ஸ்வாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிலையத்திற்குரிய உட்கட்டமைப்பு வசதிகளை நவீனமயப்படுத்துவதற்கான உதவிகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே மேற்படி இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
குறித்த ஒப்பந்தம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து மற்றும் நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்ன ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டது. இதன்போது நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சரான ரவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சின் உயரதிகாரிகள் வருகை தந்திருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM