முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டிற்கு புதியதொரு அதிகார சபை

Published By: Vishnu

21 Jan, 2019 | 04:47 PM
image

முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டிற்கு புதியதொரு அதிகார சபையினை நிறுவுவதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். 

அதன் பிரகாரம் வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையினை எதிர்காலத்தில் அதிகார சபையாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

றாகமை நகரை முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டு பகுதியாக இன்று காலை அறிவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

முற்சக்கர வண்டி கட்டுபாட்டு வலயத்தினை நிறுவும் தேசிய வேலைத்திட்டம் முதன் முதலில் கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. 

அதனடிப்படையில் றாகமையின் இன்று இரண்டாவது நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வின் கீழ் றாகமை நகரிலுள்ள முச்சக்கர வண்டி ஓட்டுனர்களிற்கு ஓய்வூதிய முறையொன்றை அறிமுகஞ்செய்தல், 25 வருடங்களிற்கு மேலாக தொடர்ச்சியாக முச்சக்கர வண்டி சாரதியாக செயற்பட்டவர்களை கௌரவித்தல் , றாகமை பகுதியிலுள்ள மூத்த முற்சக்கர வண்டி சாரதியை கௌரவித்தல் ஆகியன இன்று நடைப்பெற்றது.  

இந் நிகழ்வின் விசேட அம்சமாக 50 முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு சுற்றுலாத்துறை அனுமதிபத்திரமும் வழங்கப்பட்டது.

 

வீதி பாதுகாப்பு தொடர்பிலான தேசிய பாதுகாப்பு சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கோத்தேகொட உள்ளடங்கலாக அதிதிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டார்கள்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08