கைபேசியை ஒலிக்கவிட்ட நீதிமன்ற உத்தியோகத்தர் ; எச்சரிக்கப்பட்டு விடுதலை

Published By: Digital Desk 4

20 Jan, 2019 | 11:07 AM
image

நீதிமன்ற நடவடிக்கைகள் திறந்த மன்றில் முன்னெடுக்கும் போது கைபேசி அழைப்பு ஒலியை எழுப்பிய குற்றத்துக்கு நீதிமன்ற உத்தியோகத்தருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்ற மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜாவால் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றது.

மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நடவடிக்கைகள் திறந்த மன்றில் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, நீதிபதியின் உதவியாளரின் (ஆராச்சி) கைபேசி ஒலி எழுப்பியதால் மன்றில் பரபரப்பு ஏற்பட்டது. 

நீதிமன்றப் பொலிஸ் அலுவலகரை அழைத்த மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா, சம்பந்தப்பட்ட உத்தியோகத்தரின் கைபேசியை கைப்பற்றுமாறும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைத்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து மன்றில் முற்படுத்துமாறும் உத்தரவிட்டார்.

அதற்கமைய நீதிமன்ற பொலிஸ் உத்தியோகத்தரால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. நீதிபதியின் உதவியாளர் மன்றில் முற்படுத்தப்பட்டார். அவரைக் கண்டித்த நீதிவான், வழக்கை தள்ளுபடி செய்தார்.

நீதிமன்ற நடவடிக்கைகளின் போது ஒழுக்கங்களை கடுமையாகப் பின்பற்றும் மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா, தனது உதவியாளரான நீதிமன்ற உத்தியோகத்தரின் தவறையும் நீதியின் முன் சமமாகவே எடுத்து நடவடிக்கை எடுத்தார் என்று சட்டத்தரணிகள் சிலர் பாராட்டுத் தெரிவித்தனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32