நீதிமன்ற நடவடிக்கைகள் திறந்த மன்றில் முன்னெடுக்கும் போது கைபேசி அழைப்பு ஒலியை எழுப்பிய குற்றத்துக்கு நீதிமன்ற உத்தியோகத்தருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்ற மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜாவால் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றது.
மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நடவடிக்கைகள் திறந்த மன்றில் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, நீதிபதியின் உதவியாளரின் (ஆராச்சி) கைபேசி ஒலி எழுப்பியதால் மன்றில் பரபரப்பு ஏற்பட்டது.
நீதிமன்றப் பொலிஸ் அலுவலகரை அழைத்த மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா, சம்பந்தப்பட்ட உத்தியோகத்தரின் கைபேசியை கைப்பற்றுமாறும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைத்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து மன்றில் முற்படுத்துமாறும் உத்தரவிட்டார்.
அதற்கமைய நீதிமன்ற பொலிஸ் உத்தியோகத்தரால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. நீதிபதியின் உதவியாளர் மன்றில் முற்படுத்தப்பட்டார். அவரைக் கண்டித்த நீதிவான், வழக்கை தள்ளுபடி செய்தார்.
நீதிமன்ற நடவடிக்கைகளின் போது ஒழுக்கங்களை கடுமையாகப் பின்பற்றும் மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா, தனது உதவியாளரான நீதிமன்ற உத்தியோகத்தரின் தவறையும் நீதியின் முன் சமமாகவே எடுத்து நடவடிக்கை எடுத்தார் என்று சட்டத்தரணிகள் சிலர் பாராட்டுத் தெரிவித்தனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM