நல்லதண்ணி சிவனடிபாத மலைக்கு செல்லும் வீதியில் அமைந்துள்ள உணவகங்கள் சிலவற்றில் உணவு வகைகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் தாம் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாவதாக யாத்திரீகர்கள் தெரிவித்தனர்.
இந்த வீதியில் அமைக்கப்பட்டுள்ள உணவக உரிமையாளர்கள், சிவனடிபாத மலைக்கு செல்லும் யாத்திரிகர்களிடமிருந்து அதிகளவு கட்டணங்களை அறவிடுவதாகவும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவனம் செலுத்த வேண்டும் எனவும், எதிர்வரும் காலங்களில் அதிகளவு யாத்திரிகர்கள் இம் மலையை தரிசிக்க வர உள்ளதால், விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இவ்வாறு சிவனடிபாத மலைக்கு செல்லும் வீதியில் அமைக்கப்பட்டுள்ள உணவகங்களில் விலைப்பட்டியல் இடம்பெறாததால் அங்கு யாத்திரிகர்கள் உணவு உண்டப்பின் உணவக உரிமையாளர்களால் அதிகளவு கட்டணம் அறவிடப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
அத்தோடு சில உணவக உரிமையாளர்கள் தங்களது உணவகங்களில் உள்ள குடிநீர் போத்தல்களை விற்பனை செய்வதாக குழாய் மூலம் வழங்கப்படும் குடி நீர் குழாய்கள் உடைத்து வீசப்பட்டுள்ளதாகவும் யாத்திரிகர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இவ்வீதியில் அமைக்கப்பட்ட கழிவறைகளின் கட்டணங்களும் நேரத்துக்கு நேரம் அதிகளவு பணத்தை அறவிடுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவங்கள் பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவனத்திற்கு கொண்டுவந்து யாத்திரிகர்களின் எதிர்கால நலன்கருதி எதிர்காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கவனம் செலுத்துமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM