(எம்.மனோசித்ரா)
ரயில் மார்க்கத்தில் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட ரயிலுடன் மோதி பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார்.
கல்கிசை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேரம் வீதி, கல்கிசை ரன்வெலி ஹோட்டலுக்கு அருகிலுள்ள புகையிரத வீதியில், அளுத்தகமவிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த பரிசோதனை ரயிலிலேயே குறித்த வெளிநாட்டவர் மோதுண்டுள்ளார்.
புகையிரத்தில் மோதி பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கலுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த வெளிநாட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த நபர் 67 வயதுடைய, இதாலி நாட்டு பிரஜை என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுபோவில பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM