லுனுகல விபத்து : ஒருவர் பலி, 9 பேர் காயம்

Published By: Daya

17 Jan, 2019 | 03:24 PM
image

 (ஆர்.விதுஷா)

பதுளை,  லுனுகல  பகுதியில் 10 பேருடன் பயணித்த  வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,  9 பேர்  படுகாயமடைந்துள்ளனர். 

குறித்த விபத்து சம்பவம் இன்று வியாழக்கிழமை அதிகாலை  3.45 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

பசறை- லுனுகல  பிரதான வீதியின்  கொடல்பத்த  பகுதியில்  வைத்து குறித்த வேன் கட்டுப்பாட்டை இழந்து சுமார் நூறு அடிபள்ளத்தில் வீழ்ந்து  விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை - கட்டுக்குருந்த  விசேட அதிரடிபப்டை  பயிற்சி முகாமில் இடம்பெற்ற நிகழ்விவொன்றில் கலந்து கொண்ட பின்னர் மீண்டும் அங்கிருந்து   திரும்பிய நிலையில் சாரதிக்கு தூக்ககலக்கம் ஏற்பட்ட நிலையில் வேன் கட்டுப்பாட்டை  இழந்து  100 அடி  பள்ளத்தில் வீழ்ந்துள்ளது. 

விபத்துக்குள்ளான வேனில் பயணித்த 6 ஆண்கள் மற்றும்  3 பெண்கள்  உள்ளிட்ட  10 பேர்   படுகாயமடைந்த நிலையில்  லுணுகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ள நிலையில் அவர்களில்  ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர்   48 வயதுடைய  லுனுகல பகுதியை சேர்ந்த  அபேசிங்க முதியான்சலாகே  சமரக்கோன் பண்டா  எனப்படுபவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.  

உயிரிழந்தவரின் சடலம்  லுனுகல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான  நடவடிக்கைகளும் இன்றைய தினம் முன்னெடுக்கபட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:21:22
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01