(எம்.மனோசித்ரா)
கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வடமேல் கடற்படை கட்டளை தலைமையக அதிகாரிகள் நேற்று புதன்கிழமை முன்னெடுத்த விஷேட தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர் 2 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது செய்துள்ளனர்.
புத்தளம் பாலாவி பிரதேசத்தில் குறித்த சந்தேகநபர் முச்சக்கர வண்டியொன்றில் கேரள கஞ்சாவினை மறைத்துக் கொண்டு செல்ல முற்பட்ட போதே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேநபர் மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகை மற்றும் முச்சக்கர வண்டி என்பனவும் குறித்த பிரிவினரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM