யாழ்.மாநகர முதல்வரிடம் பொலிஸார் விசாரணை

Published By: Priyatharshan

16 Jan, 2019 | 05:55 PM
image

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில்  சட்டவிரோதமான முறையில் கேபிள் கம்பங்கள் ஒரு நிறுவனத்தினால் நாட்டப்பட்டு இருந்தன.

நாட்டப்பட்டு இருந்த மின்கம்பங்கள் அனைத்தும் யாழ்ப்பாண மாநகர முதல்வரினால் அகற்றப்பட்டிருந்தது.

இது தொடர்பில் குறித்த கேபிள் கம்பங்களை நாட்டிய நிறுவனத்தினரால் யாழ் மாநகர முதல்வருக்கு எதிராக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதியப்பட்டிருந்தது.

எனவே யாழ்ப்பாண பொலிஸாரினால் நேற்று காலை 11 மணிக்கு  மாநகர முதல்வரை விசாரணைக்கு வருமாறு யாழ்ப்பாண பொலிசாரால்  அழைக்கப்பட்ட போதிலும் அவர் தனது வேலைப் பழு காரணமாக பொலிஸ் நிலையத்திற்கு சமுகமளிக்காத நிலையில்  இன்றையதினம் பொலிசாரினால் யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் அலுவலகத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

எனினும் விசாரணைக்காக வந்த பொலிஸார், யாழ் மாநாகர முதல்வரை பொலிஸ் நிலையத்துக்கு வந்து வாய் முறைப்பாட்டை பதிவு செய்யுமாறு கோரிய போதிலும் மாநகர முதல்வர் அதற்கு தனது மறுப்பினை தெரிவித்ததை அடுத்து எதிர்வரும் 18 ஆம் திகதி பொலிசாரினால் மாநகர முதல்வர் அலுவலகத்தில் வைத்து அவருடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்வதாக  இன்றைய தினம் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36