சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு ஒத்திவைப்பு 

Published By: Priyatharshan

16 Jan, 2019 | 06:37 AM
image

நிதியமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினர் நேற்றையதினம் நடத்தவிருந்த சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்கள் பிற்போடப்பட்டுள்ளன.

வொசிங்டனில் வீசிய கடுமையான பனிப்புயலினால், இந்தப் பேச்சுக்கள் பிற்போடப்பட்டதாக, நிதியமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான இலங்கை குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட கடன் உதவியை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுக்களை நடத்துவதற்காக, இலங்கை குழு அமெரிக்கா சென்றுள்ளது.

நேற்று முன்தினம் இந்தக் குழுவினர் அனைத்துலக நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்ரின் லகாடே உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்துப் பேசவிருந்தனர்.

வொசிங்டனில் கடுமையான பனிப்புயலினால் அனைத்துலக நாணய நிதிய செயலகம் மூடப்பட்டுள்ளது. இதனால் சந்திப்பு நடக்கவில்லை என்றும், அமைச்சர் ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார்.

எனினும், இந்தச் சந்திப்பு எப்போது நடக்கும் என்ற எந்த விபரத்தையும் அவர் வெளியிடவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15