இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைவோர் கைதுசெய்யப்படுவர் - கடற்படை

Published By: Priyatharshan

15 Jan, 2019 | 03:01 PM
image

(ஆர்.விதுஷா)

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி  பிரவேசிப்பவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுறு சூரிய பண்டார தெரிவித்தார். 

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்து மீறி பிரவேசிக்கும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கை  அதிகரித்துள்ளது. 

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளின்  காரணமாக  வடபகுதி மீனவர்களின் வலைகளுக்கு பாரிய சேதம்  ஏற்பட்டுள்ளதுடன், அவர்களது வாழ்வாதாரம்  பாதிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி  பிரவேசிப்பவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

கடந்த 12 ஆம் 13  ஆம் திகதிகளில் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள்   500 இற்கும்  அதிகமான  இந்திய படகுகள்  அத்துமீறி நுழைந்தமை இலங்கை கடற்படையினரால்  அவதானிக்கப்பட்டுள்ளது.  

இதன்போது இரண்டு படகுகளில்  இருந்த   9 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு  எதிர்வரும்  17  ஆம்  திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள்  தமிழகத்தின் புதுக்கோட்டை  பகுதியை சேர்ந்தவர்கள் என விசாரணைகளின் போது  தெரியவந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19