(ஆர்.விதுஷா)
வத்தளை ஹேகித்த - ஜயப்பன் சுவாமி கோவிலுக்கு அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தின் பின்னணியில் பாதாள உலகக் குழுவினர் தொடர்பு பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் .
இதேவேளை குறித்த சம்பவத்துடன், தொடர்புடைய சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி ஆதாரத்தை மையமாகக்கொண்டும் 4 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு வேறுபட்ட கோணங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,
ஹேகித்த - ஐயப்பன் சுவாமி கோவிலுக்கு அண்மையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் போது இருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.
இதன் போது 31 வயதுடைய இல 158-07 ஜிந்துப்பிட்டி வீதி , கொட்டாஞ்சேனை கொழும்பு-13 பகுதியை சேர்ந்த ஸ்டீவன் ராஜேந்திரன் எனப்படும் சாள்ஸ் எனப்படுபவரும் 38 வயதுடைய இல 151-34 ஜிந்துப்பிட்டி பகுதியை சேர்ந்த சுப்பய்யா மதிவானன் எனப்படுபவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இச் சம்பவத்தின் போது முகத்தை முழுமையாக மறைத்த வண்ணம் காரில் வந்த இனம் தெரியாத நபர்கள் இருவர் ரி 56 ரக துப்பாக்கியால் சுமார் 24 தடவைகள் சரமாரியாக துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
பாதாள உலக குழுவினருக்கு இடையில் போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வரும் முரண்பாட்டின் காரணமாகவே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்டவிசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையிலேயெ "குடு செல்வி "என அழைக்கப்படுபவரின் மருமகள் , மருமகளின் சகோதரன் , பிள்ளைகள் மற்றும் அவருடைய நண்பன் ஆகியோர் பயணித்த காரிற்கே துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த இரு பாதாள உலக குழுவினருக்கும் இடையில் இடம்பெற்று வரும் முரண்பாடு காரணமாக இதுவரையில் 20 பேர் வரையில் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை , உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக ராகமை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதாள உலகக்குழுவினர் இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புபட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிசார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பல்வேறு கோணங்களில் முன்னெடுத்த வருகின்றனர். இதற்காக நான்கு விசேட பொலிஸ் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM