(எம்.ஆர்.எம்.வஸீம்)
பாரிய நிதிமோசடி தொடர்பான வழக்கு விசாரணைகளை மேற்கொள்ளும் இரண்டாவது விசேட மேல் நீதிமன்றம் இரண்டுவாரங்களுக்குள் நிறுவப்படும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
அதற்கான நீதிபதிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றன. என்றாலும் குறித்த விசேட நீதிமன்றத்தை நிறுவ பொருத்தமான இடம் கிடைக்காதமையே தாமதத்துக்கு பிரதான காரணமாகும்.
அத்துடன் நீதிமன்ற சேவை அமைப்பு சட்டமூலத்தின் பிரகாரம் நீதி அமைச்சர் என்றவகையில் எனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின் கீழ் இந்த விசேட நீதிமன்ற அமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன்.
முதலாவது விசேட நீதிமன்றம் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டு தற்போது வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. என்றாலும் இரண்டாவது நீதிமன்றம் அமையவிருக்கும் இடம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
பாரிய நிதிமோசடி தொடர்பான வழக்கு விசாரணைகளை முன்னெடுக்க மூன்று நீதிபதிகளைக்கொண்ட விசேட நீதிமன்றங்களை நிறுவும் பணி தாமதிப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM