ஜனாதிபதியின் பெயரை பயன்படுத்தினால் பொறுப்புக் கூறமுடியாது -  கோத்தாவிற்கு தயாசிறி பதிலடி

Published By: Digital Desk 4

14 Jan, 2019 | 05:11 PM
image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவது அரசியல் ஆசையுள்ள ஒவ்வொருவருக்கும் கனவாக இருக்கலாம். அதனை அவர்கள் வெளிப்படையாகவும் தெரிவிப்பார்கள். 

எனினும் அதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினுடைய பெயரை அவர்கள் பயன்படுத்தினால் அதற்கு எம்மால் பொறுப்புக் கூற முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயளாலர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 

கடந்த சனிக்கிழமை வியத்மக அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்திருந்த முன்னாள் பாதுகாப்புச் செயளாலர் கோத்தாபய ராஜபக்ஷ தான் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயார் எனவும், அதற்கு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஆதரவு தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இது குறித்து வினவிய போதே தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், 

ஜனாதிபதி வேட்பாளர் குறித்த கனவு ஐக்கிய தேசிய கட்சி, பொதுஜன பெரமுன என அனைத்து கட்சிகளிலுமுள்ள சிலரிடம் காணப்படுகின்றது. 

அததற்காக அவர்கள் அனைவரையும் வேட்பாளராக களமிறக்க முடியாது. கட்சி ரீதியாக கலந்தாலோசித்து அதன்படியே தீர்மானங்களை எடுக்க முடியும். மாறாக தனிப்பட்டவர்களின் விருப்புக்களினடிப்படையில் செயற்பட முடியாது. 

அத்தோடு ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியினுடைய வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை களமிறக்குவதில் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் உறுதியாக உள்ளோம். எனினும் ஜனாதிபதி இன்னும் இது தொடர்பில் தனது தனிப்பட்ட கருத்தினை தெரிவிக்கவில்லை. கூட்டணி அமைத்தாலும் தனித்து போட்டியிட்டாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே வேட்பாளர் என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08