(இரோஷா வேலு)
வனவிலங்குகள் மாத்திரமன்றி செல்லப்பிராணிகளையும் பாதுகாக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுவரும் விலங்குகள் நலன்புரிச் சட்டம் விரைவில் பாராளுமன்றில் சமர்பிக்கப்படும் என சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர்.டி.சில்வா தெரிவித்தார்.
நாட்டில் காணப்படும் விலங்குகள் பாதுகாப்பு சட்டங்கள் தொடர்பில் விலங்குகளை துன்புறுத்துவோருக்கு போதிய தெளிவு இல்லை என்பதே எமது கருத்தாகும். அதைவிட, அச் சட்டங்களின் பிரகாரம் குற்றவாளிகளாக அடையாளங்காணப்படுபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் அவ்வளவு கடினமாக காணப்படவில்லை என்பதினாலேயே தொடர்ச்சியாக விலங்குகள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றன.
நாகரீக வளர்ச்சி கண்டுள்ள நாமோ விலங்குகளை சித்திரவதை செய்வதிலும் அவற்றை கொன்று குவிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றோம். மிருக வதையை காணொளி பதிவுசெய்து முகப்புத்தகத்தில் பதிவேற்றி இன்பமடைகின்றோம்.
இந்நிலைமையானது இனிவரும் காலங்களில் முற்றாக இல்லாதொழிக்க சட்டங்கள் கடுமையாக்கப்படுகின்றன. மனிதர்களுடன் விலங்குகளுக்கும் வாழ உரிமைகள் ஸ்தீரப்படுத்தப்படுகின்றது. இதற்காகவே விலங்குகள் நலன்புரி சட்டம் விரைவில் பாராளுமன்ற அங்கீகாரத்துக்காக பாராளுமன்றுக்கு வழங்கப்படவுள்ளது.
இந்த சட்டத்தை வரையும் பணிகளில் சட்டத்தரணிகள் சங்கம் முழு மூச்சாக இணைந்துள்ளது. இதற்காக மக்களிடமிருந்தும் கருத்துக்கள் பெறப்படுகின்றன. நீங்களும் உங்கள் கருத்துக்களை basl.lawnet@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டப்படுகின்றீர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
ஸ்ரீ போதிராஜா மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விலங்குகள் நலன்புரி சட்டம் தொடர்பான மக்கள் கருத்துக் கோரல் நிகழ்வு இன்று நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள நாமன்ன நிக்காயா தலைமையத்தில் இடம்பெற்றது.
இங்கு இடம்பெற்ற மக்கள் கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர்.டி.சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM