அம்பலாந்தோட்டையில் ஆரம்பிக்கப்ட்ட உஸ்ஸன்கொட சுற்றுலா முகாமுக்கு சென்றிருந்த இந்தியப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் காணப்படும் சுற்றுலாக் குன்றுக்கு சென்ற இந்தியப் பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் மணல்வளியில் விழுந்து கிடந்த குறித்த நபரை அம்பியூலன்ஸ் வண்டியின் மூலம் அம்பலாந்தோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த நபரின் சடலம் தற்போது அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பில் அம்பலாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த சுற்றுலா முகாம் கடந்த 09 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், சுமார் 70 நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் பங்கெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM