வவுனியாவில் இயங்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வன்னிப்பல்கலைக் கழகமாக தரமுயர்த்துவது தொடர்பிலான தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் கோரியுள்ளார்.
நேற்று முன்தினம் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்தில் அமைச்சர் ரவூக் ஹக்கீமை சந்தித்த போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
கடந்த 28 வருடங்களுக்கு முன்னர் வவுனியா பல்கலைக்கழக கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகமாக இயங்கிவரும் நிலையில் பலரது வேண்டு கோளிற்கமைய வன்னி பல்கலைக்கழகமாக தரமுயர்த்த உயர்கல்வி அமைச்சால் அறிவிக்கப்பட்டிருந்த போதும் இதுவரையில் வர்த்தமானியில் அறிவித்தல் வெளியிடப்படவில்லை. இந்த நிலையிலேயே மேற்படி சந்திப்பு நடைபெற்றது.
உயர்கல்வி அமைச்சருடனான சந்திப்பில் வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், பல்கலைகழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மோகன், வவுனியா வளாக முதல்வர் கலாநிதி மங்களேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM