தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து கருத்து- பண்டியா ராகுலிற்கு தடை

Published By: Rajeeban

12 Jan, 2019 | 11:25 AM
image

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் வெளியிட்ட கருத்துக்களிற்காக  விசாரணையை எதிர்கொண்டுள்ள ஹர்டிக் பண்டியாவிற்கும் கேஎல் ராகுலிற்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை உடனடி தடையை விதித்துள்ளது.

பெண்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை இரு வீரர்களும் தெரிவித்தனர் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையிலேயே இந்த தடையை  இந்திய அதிகரிகள் விதித்துள்ளனர்.

விசாரணைகள் முடிவடையும் வரை அனைத்து போட்டிகளிலும் விளையாடுவதற்கான தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட்டை நிர்வகிக்கும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இரு வீரர்களிற்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்ககூடாது என கோரும் ஆவணத்தினை இரு வீரர்களிற்கும் அனுப்பிவைத்துள்ள கிரிக்கெட் நிர்வாக குழுவினர் உங்களுடைய ஒழுங்கீனம் மற்றும் தவறான நடத்தை குறித்த விசாரைணைகள் ஆரம்பமாகி தற்போது இடம்பெறுகின்றன எனவும் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் யாப்பிற்கு அமைய நீங்கள் இருவரும் உடனடியாக தடை செய்யப்படுகின்றீர்கள் என கிரிக்கெட் நிர்வாக குழுவினர் இரு வீரர்களிற்கும் தெரிவித்துள்ளனர்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை , ஐசிசி, அல்லது மாநில அமைப்பொன்றின் போட்டிகள் அல்லது நிகழ்வுகளில் நீங்கள் கலந்துகொள்ள முடியாது எனவும் இந்திய கிரிக்கெட் நிர்வாக குழுவினர் பண்டியாவிற்கும் ராகுலிற்கும் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அவுஸ்திரேலிய தொடரில் கலந்துகொண்டுள்ள இரு வீரர்களும் நாடு திரும்பவுள்ளனர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தெரிவித்த கருத்துக்களிற்காக ஹர்டிக் பன்டியாவிற்கும் கேஎல் ராகுலிற்கும் போட்டி தடைகளை விதிக்கவேண்டும் என  இந்திய கிரிக்கெட் நிர்வாகிகள் பரிந்துரை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட்டை நிர்வகித்து வரும் குழுவை சேர்ந்த வினோத்ரோய் இருவீரர்களிற்கும் இரு போட்டிதடைகளை விதிக்கவேண்டும் என பரிந்துரை செய்திருந்தார்.

அதேவேளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் பொருளாளர் அனிருத் சௌத்திரி இந்திய கிரிக்கெட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியமைக்காக இரு வீரர்களிற்கும் எதிரா கடும் தண்டனையை விதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இரு வீரர்களும் தெரிவித்துள்ள கருத்துக்களை அவதானித்துள்ளேன்,அவை மிகவும் மோசமானவை எனகுறிப்பிட்டுள்ள வினோத்ரோய்  மன்னிப்பு கேட்பதன் மூலம் தவறை மறைத்துவிட முடியாது இரு வீரர்களிற்கும் இரு போட்டி தடை விதி;க்கவேண்டும் என தெரிவித்துள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49