முல்லைத்தீவில் இருந்து டிப்பரில் மறைத்து கொண்டுசெல்ல முற்பட்ட தேக்குமரக்குற்றிகள் பொலிசாரினால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் இருந்து மணல் ஏற்றும் டிப்பரில் மறைத்து ஏற்றப்பட்ட 25 தேக்கு மரக்குற்றிகளுக்கு மேல் மணலினை ஏற்றி மறைத்துக்கொண்டு யாழ்ப்பாணம் செல்ல முற்பட்ட டிப்பர் வாகனமொன்றினை விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் பிடிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட உப பொலிஸ் பரிசோதகர் திசநாயக்க தலைமையிலான குழுவினர் முறிப்பு பகுதியில் குறித்த டிப்பரினை மறித்து சோதனை செய்தபோது டிப்பரில் மணல் போடப்பட்டு மறைத்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்படவிருந்த 25 தேக்கு மர குற்றிகளை ஏற்றிய டிப்பர் வண்டியினை கைப்பற்றி குறித்த வண்டியின் சாரதியையும் கைதுசெய்துள்ளனர்.
குறித்த டிப்பர் வண்டி முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் கைதுசெய்யப்பட்ட சாரதியினை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM