இந்தியா மற்றும் சுற்றுலா தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்றையதினம் நாக்பூரில் ஆரம்பமாகின்றது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகின்றது. இந்நிலையில் மொஹாலியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 108 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. பெங்களூரில் நடைபெற்ற 2 ஆவது டெஸ்ட் மழையின் பாதிப்பால் வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது.
இந்நிலையிலேயே மூன்றாவது போட்டி இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது.
இந்தப்போட்டியில் வெற்றி பெறுவதற்கான இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மொகாலி டெஸ்டை போல இந்த டெஸ்டிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா? அல்லது தென் ஆபிரிக்கா பதிலடிவழங்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நாக்பூர் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான அமையும் என கணிப்பாளர் கள் குறிப்பிடுகின் றார்கள். இந்திய அணி சார்பாக ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் ஆதிக்கம் அதிகமாக காணப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்திய துடுப்பாட்டத்தில், முரளிவிஜய், புஜாரா அணித்தலைவர் கோஹ்லி உள்ளிட்டோர் பிரகாசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. வேகப்பந்து வீச்சாளர்களில் இஷாந்த்சர்மா, வருண் ஆரோன் அணிக்குள் உள்வாங்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் ஸ்டூவர்ட் பின்னி நீக்கப்பட்டால் அமித் மிஷ்ரா இடம் பெறுவாரெனவும் உமேஷ் யாதவுக்கு வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளதாகவும் இந்திய கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை தென்ஆபிரிக்கா 2010ஆம் ஆண்டு இதேமைதானத்தில் இந்தியாவை வெற்றிகொண்டிருந்தது. இந்த நம்பிக்கையுடனும் அணித்தலைவர் ஹசிம் அம்லா, டுபெளிசிஸ், டுமினி, எல்கர் , எ.பிடி.வில்லியர்ஸ் போன்ற துடுப்பாட்டவீரர்களை நம்பியுமே அவ்வணி களமிறங்குகின்றது. உபாதைக்குள்ளான நிலையில் 2ஆவது டெஸ்டில் இடம் பெறாத வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் இந்த டெஸ்டிலும் விளையாடுவாரா என்பது உறுதியில்லை. இம்ரான் தாஹிர், ஹார்மர் ஆகியோர் சுழற்பந்தில் அதிர்ச்சியளிக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியா மற்றும் தென் ஆபிரிக்க அணிகள் இதுவரையில் 31 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளன. அவற்றில் இந்தியா 8 டெஸ்ட்களிலும், தென்ஆபிரிக்கா 13 டெஸ்ட்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 10 டெஸ்ட் போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM