(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)
நாட்டில் பாரிய நிதிமோசடிகளை மேற்கொண்டுவிட்டு வெளிநாடுகளில் மறைந்திருப்பவர்களை சட்டத்துக்கு முன் கொண்டுவருவதை தடுப்பதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். அதற்காக இராணுவத்தினரையும் முற்படுத்துகின்றனர். அத்துடன் சட்டங்களை அங்கிகரித்துக்கொள்வதற்கு எடுக்கும் முயற்சியை அதனை அமுல்படுத்த அரசாங்கம் எடுப்பதில்லை என மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டமூலம் மற்றும் ஆளொருவரின் இறப்புக்கான இழப்பீடுகளை அறவிடுதல் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
அமுலில் இருக்கும் பயங்கரவாத தடைச்சட்டம் தற்போது தேவையில்லை. யுத்தக்காலத்தில் அது தேவையாக இருந்திருக்கும். ஆனால் தற்போது அந்த சட்டத்தை அரசாங்கம் தனக்கு தேவைக்கு பயன்படுத்து வருகின்றது. இந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட பல இளைஞர்கள் பல வருடங்களாக சிறைகளில் இருக்கின்றனர். அவர்களுக்கு இதற்கு எதிராக மேன்முறையீடு செய்யவும் முடியாது. அதனால் இதனை நீக்கவேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM