வெளிநாட்டில் கைதுசெய்யப்படும் ஆபத்தை எதிர்நோக்குகின்றார் சவேந்திர சில்வா- ஜஸ்மின் சூக்கா

Published By: Rajeeban

10 Jan, 2019 | 03:50 PM
image

மிகமோசமான யுத்தகுற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ள ஒருவரை இராணுவத்தின் பிரதானியாக நியமிப்பது என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் இலங்கையை மிகவும் கீழ்நிலைக்கு இட்டுச்சென்றுள்ளது என சர்வதே உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது

2009 ம் ஆண்டு மருத்துவமனைகள் , உணவினை பெறுவதற்காக வரிசையில் நின்றவர்கள் மற்றும் முகாம்கள் மீது வேண்டுமென்றே தாக்குதலை மேற்கொண்டு ஒருசில மாதங்களில் பலஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு காரணமான 58வது படைப்பிரிவின் கட்டளை தளபதி என்ற அடிப்படையில் சவேந்திர சில்வா விசாரணையை எதிர்கொள்ளவேண்டியவர் என ஐக்கியநாடுகள் விசாரணை குழு தெரிவித்திருந்தது எனவும் ஐடிஜேபி அமைப்பு குறிப்பிட்டுள்ளது

சவேந்திர சில்வா தலைமையிலான படைப்பிரிவு பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் சுட்டுக்கொல்லப்படுவதற்கும் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல்போவதற்கும் சித்திரவதைகளிற்கும் காரணம் எனவும் அந்த அமைப்பு தெரிவி;த்துள்ளது

2009 மே 18ம் திகதி வெள்ளைக்கொடியுடன் சரணடைதல் இடம்பெற்றவேளை அப்பகுதியில் சவேந்திர சில்வா காணப்பட்டார்,என தெரிவித்துள்ள ஐடீஜேபி அமைப்பு விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் தலைவர்களுடன் சில்வாகைகுலுக்குவதை  நான் நேரில் பார்த்தேன் என ஓருவர் தெரிவித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டிற்கு ஒவ்வொரு முறை செல்லும்போது கைதுசெய்யப்படும் அபாயத்தை எதிர்நோக்கும் இராணுவ பிரதானியொருவரை இலங்கை தற்போது கொண்டுள்ளது என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்

மேஜர் ஜெனரல் சில்வா குறித்த ஆவணமொன்றை நாங்கள் தயாரித்துள்ளோம் அதனை விரைவில் வெளியிடுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சவேந்திர சில்வாமீது சர்வதேச  குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு போதியளவு ஆதாரங்கள் உள்ளதாக நாங்கள் கருதுகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் தேடப்படும் இலங்கையர்களில் மிக முக்கியமானவர் இவர் என்பதில் சந்தேகமில்லை எனவும் தெரிவித்துள்ள ஜஸ்மின் சூக்கா எனினும் ஒரு தசாப்தகாலத்திற்கு பின்னர் விசாரணையை எதிர்கொள்ளவேண்டிய அவரிற்கு துயரம் அளிக்கும் விதத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

2009 யுத்தத்திலிருந்து தப்பி வெளிநாட்டுக்கு தப்பியோடிய பலர் சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து  அச்சம் வெளியிட்டுள்ளனர் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு அவமரியாதை செய்யும் நியமனம் இதுவென தெரிவித்துள்ள ஜஸ்மின் சூக்கா இது இலங்கையில் நல்லிணக்க முயற்சிகளையும் பாதிக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்

முழு நாட்டிற்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியவரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் நெருங்கிய சகாவுமான ஒருவரிற்கு பதவி உயர்வு வழங்குவது குறித்து ஜனாதிபதி சிறிசேன என்ன கருதுகின்றார் என்பது புரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்

கடந்த சில வருடங்களில் சவேந்திர சில்வாவின் பதவி உயர்வினை உன்னிப்பாக கண்காணித்து ஆராய்ந்திருந்தால் இந்த பதவி உயர்வை தடுத்திருக்கலாம் என ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51